|
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 15 -50 கி.மீ. தூரத்தில்
ஸ்ட்ரேடோஸ்பியர் படலம் உள்ளது. வாயு மண்டலத்தின் இப்படலத்தில் தான்
இயற்கையாகவே ஓஸோன் படலம் அமைந்துள்ளது. இது சூரியனின் புற ஊதாக் கதிர்கள்
பூமிக்கு வந்து சேராமல் தடுக்கிறது. அதன் மூலம் உயிர்களுக்குப்
பாதுகாப்பு அளிக்கின்றன.
பூமியின் மேற்பரப்புக்கு மிகவும் நெருக்கமாக உள்ள வாயு மண்டலப் படலம்,
வாகனங்களினால் உண்டாகும் புகை, நைட்ரஜன்ஆக்ஸைடுகள் மற்றும் ஹைட்ரோ
கார்பன்கள் இவற்றின் அளவுகள் அதிகரிப்பதால் மாசுபடுகிறது. சூரிய ஒளி
இருக்கும் போது, இந்த வேதிப்பொருட்கள் ஓஸோனை உருவாக்குகின்றன. இந்த
ஓஸோன், இருமல், தொண்டை எரிச்சல், ஆஸ்மாவை, போன்ற நோய்களை
உண்டாக்குகின்றன. இவை பயிர்களுக்கும் ஊறு விளைவிக்கக்கூடியவை.
ஸ்ட்ரேடோஸ்பியர் படலத்தில் இருக்கும் ஓஸோன் புறஊதாக் கதிர்களை பூமிக்கு
வராமல் தடுத்து நிறுத்தி நன்மை விளைவிக்கும். அதே நேரத்தில்,
வாயுமண்டலத்தின் கீழ்மட்டம் மாசுபடுவதால் ஏற்படும் ஓஸோன், உடல்
நலக்கேட்டை அதிகரிக்கிறது.
|