பெண்களும் கல்வியும்

அனைவருக்கும் கல்வி என்பதில் இந்திய அரசாங்கம் தனது வலுவான உறுதிமொழியை தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆசியாவில், பெண்கல்வி விகிதத்தில், இந்தியா, இன்னும் கீழான நிலையிலேயே இருக்கிறது. 1991இல் 7 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட 33 கோடி பெண்களில், 40 சதவிகிதத்திற்கும் குறைவான பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர். இதன் அர்த்தம், இன்னும் 20 கோடிக்கு அதிகமான பெண்கள் கல்வியறிவு பெறாதவராக இருக்கிறார்கள் என்பதே.

பெண்களிடையே காணப்படும் குறைந்த கல்வியறிவு, அவர்கள் வாழ்க்கையை மட்டுமல்லாமல், அவர்களது குடும்ப வாழ்க்கையையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது. கல்வியறிவு இல்லாத பெண்களிடையே, அதிக அளவு பிரசவத்தின் போது தாய்மார்கள் மரணம், தேவையான சத்துக்களின் பற்றாக்குறை, குறைந்த அளவே சம்பாதிக்கும் திறன், வீட்டிற்குள் கொடுக்கப்படும் குறைவான உரிமை என பல்வேறு வகையான குறைபாடுகளை, ஆய்வுகள் பல சுட்டிக் காட்டுகின்றன.

பெண்களின் கல்வியறிவு போதாமை, அவர்களுடைய குழந்தைகளின் சுகாதாரத்திலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதமும் அவற்றின் தாய்மார்களின் கல்வியறிவு விகிதமும் ஒரு ஆய்வின் படி எதிரிடையாக சம்மந்தப்பட்டுள்ளது. கூடுதலாக, நாட்டில் கல்வியறிவு பெற்ற மக்களின் பற்றாக்குறை, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் முட்டுக்கட்டையாய் இருக்கிறது

'கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (கே.ஜி.பி,வி.)" திட்டத்தை அமல்படுத்துவதற்கான நெறிமுறைகள்


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: