|
|
கல்விக்கான உரிமைச் சட்டம்
-
- ஆறிலிருந்து பதினான்கு வயது வரையிலான ஒவ்வொரு குழந்தையும் இலவச
மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமை பெற்றுள்ளது. அரசியல்
அமைப்புச் சட்ட 86ஆவது பிரிவில் சேர்க்கப்பட்ட சட்டப்பிரிவு 21ஏ சட்டத்
திருத்தத்தின்படி, கல்வி உரிமை மசோதா இந்தச் சட்டப் பிரிவு சட்டத்திற்கு
வலு சேர்க்கிறது,
- அரசால் நடத்தப்படும் அரசுப் பள்ளிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச
கல்வி வழங்கும். இந்தப் பள்ளிகள் அரசு நிர்வாகக் குழுக்களால், (ஷிவிசி )
நிர்வகிக்கப்படும் தனியார் பள்ளிகள் குறைந்தது 25% குழந்தைகளையாவது
அவர்களுடைய பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- தொடக்கக் கல்விக்கான எல்லாவிதமான அம்சங்களையும் தரத்தையும்
கண்காணிப்பதற்காக தொடக்கக்கல்விக்கான தேசிய கமிஷன் ஒன்று
அமைக்கப்படும்
|
|
இந்த சட்டம் பற்றிய முழு
விவரங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்.
கல்வி உரிமைச் சட்டம் 2009 முக்கிய அம்சங்கள்
-
|
டிசம்பர் 2002
அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 86ஆவது பிரிவு(2002) உட்பிரிவு சட்டம்
21ஏ (பிரிவு111)-ன்படி 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளும்
இலவச கட்டாயக் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை உரிமையாக்கப்பட
வேண்டும்,
அக்டோபர் 2003
மேற்குறிப்பிட்ட சட்டப்பிரிவின் முதல் அறிவிப்பு, அதாவது குழந்தைகளுக்கான
கட்டாயக் கல்வி வழங்குவது பற்றிய இந்தச் சட்ட மசோதா, 2003 மிகப் பெரிய
அளவில் பொது மக்கள் கருத்து மற்றும் விமர்சனங்களுக்காக அக்டோபர் 2003
இணையதளத்தில் வெளியிடப்பட்டது,
2004
இந்த சட்ட நகலைப் பற்றி பெறப்பட்ட ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு, இலவச
கட்டாய கல்வி மசோதா 2004 என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய மசோதா
தயாரிக்கப்பட்டு http://education.nic.in என்ற இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.
ஜூன் 2005
மத்திய கல்வி ஆலோசனை குழு 'கல்வி பெறும் உரிமை' என்ற மசோதாவை தயாரித்து
மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது, மனிதவள மேம்பாட்டு
அமைச்சகம் அதை திருமதி சோனியா காந்தி தலைமை வகிக்கும் தேசிய ஆலோசனை
கமிட்டிக்கு அனுப்பி வைத்தது. தேசிய ஆலோசனை கமிட்டி அதை பிரதம மந்திரிக்கு
பார்வைக்கு அனுப்பி வைத்தது.
ஜூலை 2006
மத்திய நிதிக்குழு மற்றும் ஆலோசனை குழு நிதிப் பற்றாக்குறையைக் காரணம்
காட்டி இந்த மசோதாவை நிராகரித்தது. அவசியமான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுவதற்காக மாநிலங்களுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது,
(அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 86ஆவது பிரிவு தேசிய அளவில் நிதிப்
பற்றாக்குறை என்று குறிப்பிடப்பட்ட மசோதா)
ஜூலை 19, 2006
சி.ஏ.சி.எல்., எஸ்.ஏ.எஃப்.ஈ., என்.ஏ.எஃப்.ஆர்.ஈ., சி.ஏ.பி.ஈ. போன்றவை
ஐ.எல்.பி. மற்றும் பிற அமைப்புகளை பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளினால்
ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் மாவட்ட அளவிலும் கிராம அளவிலும் செய்ய
வேண்டியவை குறித்தும் ஆதரவு நடவடிக்கை மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டத்திற்காக அழைப்பு விடுத்துள்ளன.
|
|
-
|
1. இந்த
சட்டம் ஏன்
இன்றியமையாதது?
அரசியல் அமைப்புச் சட்டத்திருத்த அமலாக்கத்தை உறுதிபடுத்துதற்கான
திசையில் அரசின் முதல் நடவடிக்கை என்ற கோணத்தில் இந்த சட்ட மசோதா
முக்கித்துவம் வாய்ந்தது. இதைப்போலவேஇந்த மசோதா மேலும்:
- இலவச கட்டாய தொடக்க மற்றும் மேல்நிலை கல்வி வழங்குவதற்கான சட்டம்
- எல்லா இடங்களிலும் பள்ளிக்கூடம் ஏற்படுத்தவது
- பள்ளி கண்காணிப்பு குழு அமைப்பது _ முறையாக இயங்குவதைக்
கண்காணிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்
- 6-14 வயது வரையிலான குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படக்கூடாது என்பதை
கண்காணிக்கிறது
- இவை அனைத்தும் முறைசார்ந்த பொதுகல்வித்திட்டத்தை மேம்படுத்தி அனைத்து
குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் சமூக ரீதியாகவும்,
பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர் உருவாவதை தடுப்பதற்கான
அடிப்படை நடவடிக்கைகளை வழங்குகிறது.
2. இந்த
சட்டத்தில் 6 முதல்
14 வரையிலான வயது
தேர்ந்தெடுக்கப்பட்டது
ஏன்?
அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பப் பள்ளி கல்வி முதல் மேல்நிலைப்
பள்ளி கல்வி வரை கட்டாயக் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதா,
இந்த வயதில் வழங்கப்படும் கல்வி அவர்களுடைய எதிர்காலத்திற்காக போடப்படும்
அஸ்திவாரமாக அமையும் என்ற கருத்தைக் கொண்டு உருவானது.
இந்த சட்டத்தின் முக்கியத்துவம் என்ன மற்றும் இதனால் நம்
நாட்டுக்கு என்ன பயன்?
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச் சட்டம்,
2009 [Right of Children to Free and Compulsory Education – (RTE) Act
2009] நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்பு
மிக்க கணமாகும்.
குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும்
தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு, இது
ஒரு துவக்கத்தை அளித்துள்ளது.
உலகிலுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளை
மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகையிலான இலவச கல்வி பெற, தேச
அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலவச கட்டாய ஆரம்பக் கல்வி என்றால் என்ன?
6 முதல் 14 வயது வரையான அனைத்து குழந்தைகளும், தங்கள் வீட்டிற்கு
அருகாமையிலுள்ள பள்ளியில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி கற்க உரிமை
பெறுகிறார்கள்.
ஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல்லது பெற்றோரோ நேரடியான (பள்ளிக்
கட்டணம்) மற்றும் மறைமுகமான (சீருடைகள், பாட புத்தகங்கள், மதிய உணவு,
போக்குவரத்து) எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. குழந்தைகளின்
ஆரம்பக் கல்வி பூர்த்தியாகும் வரை, கல்விக்கான அனைத்துச் செலவுகளையும்
அரசே ஏற்கும்.
கல்விக்கான உரிமை நிலைநாட்டப்படுவதில், பெற்றோர் மற்றும்
சமுதாயத்தின் பங்கு என்ன?
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச் சட்டம்,
2009 நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்பு
மிக்க கணமாகும். இந்தியாவில் முதல் முறையாக, குடும்பங்கள் மற்றும்
சமுதாயத்தின் உதவியுடன், குழந்தைகள் தங்கள் உரிமையான ஆரம்பக் கல்வி
பெறுவதற்கு அரசு உத்திரவாதம் அளிக்கிறது.
உலகிலுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே, குழந்தைகளின் முழுத் திறனும்
வெளிப்படும் வகையில், குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள்
விரும்புக் வகையிலான இலவச கல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
2009 ம் ஆண்டில், இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையான 8 மில்லியன்
குழந்தைகள் பள்ளி செல்லவில்லை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவை
தவிர்த்து விட்டு, 2015- க்குள் அனைத்து குழந்தைகளும் ஆரம்பக் கல்வி
முடிக்கும் இலக்கை உலகால் அடைய முடியாது.
ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்தப்படும் பள்ளி நிர்வாகக் குழுவில்
உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்
உறுப்பினர்களாக இருப்பர்.பள்ளி நிர்வாகக் குழு, பள்ளிக்கான மேம்பாட்டு
திட்டங்களை வகுப்பது, அரசு நிதியை முறையாகப் பயன்படுத்துவது மற்றும்
ஒட்டுமொத்த பள்ளியின் சூழலைக் கண்காணிப்பது ஆகிய பணிகளை செய்யும். பள்ளி
நிர்வாகக் குழுக்களில் 50 சதவீதம் பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவைச்
சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை
இச்சட்டம் கட்டாயமாக்கி உள்ளது. சிறுவர் மற்றும் சிறுமியருக்கான தனித்தனி
கழிப்பறைகளை ஏற்படுத்துவது, உடல் நலம், சுகாதாரம், மற்றும் தூய்மை
ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து கல்வியை முழுமை பெற வைப்பது ஆகியவற்றில்
இவ்வாறான சமுதாய பங்கேற்பு பெரிதும் உதவும்.
கல்விக்கான உரிமைச் சட்டத்தால் எவ்வாறு குழந்தைகள் விரும்பும்
பள்ளிகளை உருவாக்க முடியும்?
நல்ல கல்விச் சூழலை ஏற்படுத்த, அனைத்து பள்ளிகளும் கட்டமைப்பு மற்றும்
ஆசிரியர்கள் தொடர்பான நெறிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். ஆரம்பக் கல்வி
நிலையில், ஒவ்வொரு 60 குழந்தைகளுக்கும் நன்கு பயிற்சி பெற்ற இரண்டு
ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பள்ளிக்கு வருகை தருவது, பாடத்திட்டத்தை
முழுமை செய்வது, குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறனை மதிப்பிடுவது,
தவறாமல் பெற்றோர் - ஆசிரியர் கூட்டங்களை நடத்துவது ஆகியவற்றை ஆசிரியர்கள்
கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். வகுப்புக்கு தகுந்தவாறு அல்லாமல்,
மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கை
இருக்கும்.
குழந்தைகள் சிறப்பாகக் கற்பதை உறுதி செய்ய ஆசிரியர்களுக்கு தேவையான
உறுதுணையை அரசு நிறைவேற்றும். பள்ளி நிர்வாகக் குழுவுடன் இணைந்து,
பள்ளியின் தரத்தையும் சமத்துவத்தையும் உறுதி செய்வதில் சமுதாயமும்,
பெற்றோரும் முக்கிய பங்காற்ற வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் கல்வி உரிமைக்
கனவை நனவாக்குவதற்கு தேவையான அனைத்து சட்ட வடிவங்களையும், ஏதுவான
சூழ்நிலைகளையும் அரசு உருவாக்கும்.
இந்தியாவில், எவ்வாறு கல்வி உரிமைச் சட்டத்தை
நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கான நிதியைப் பெறுவது?
குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு
குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி
செய்வதற்கு இச்சட்டம் ஒரு துவக்கத்தை அளித்துள்ளது.
உலகிலுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளை
மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகையிலான இலவச கல்வி பெற, தேச
அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு தேவைப்படும் நிதியை, மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து
கொள்ளும். மத்திய அரசு, தேவைப்படும் நிதியை கணக்கிடும்: மாநில
அரசுகளுக்கு, இதிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் நிதியாக வழங்கப்படும்
கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றத் தேவையான கூடுதல் நிதியை
மாநிலங்களுக்கு வழங்குவதை பரிசீலிக்கும்படி, மத்திய அரசு, மத்திய நிதிக்
குழுவை (Finance Commission) கேட்டுக் கொள்ளலாம்.
சட்டத்தை நடைமுறைபடுத்த தேவைப்படும் மிகுதி நிதிக்கு மாநில அரசுகள்
பொறுப்பேற்க வேண்டும். சமுதாய அமைப்புகள், மேம்பாட்டு நிறுவனங்கள், தொழில்
நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் பங்களிப்புடன் நிதிப்பற்றாக்குறையை
போக்க முடியும்.
கல்வி உரிமையை அடைவதில் உள்ள தடைகள் யாவை?
ஏப்ரல் 1 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. வரைவு விதிகள்
மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் மாநிலங்கள்
தங்களுடைய விதிகளை வடிவமைத்து, கூடிய விரைவில் அவற்றை வெளியிட
வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர்கள், இடம் பெயர்ந்த குழந்தைகள், அதிக கவனம்
தேவைப்படும் குழந்தைகள், அல்லது சமுதாயம், கலாச்சாரம், பொருளாதாரம், மொழி,
வசிப்பிடம், பாலினம் போன்ற பிற அடிப்படைகளில் ஒதுக்கப்பட்ட மக்களை
சென்றடையும் வகையில் சிறப்பு வழிமுறைகள் இச்சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன.
கல்வி உரிமைச் சட்டம், கற்பித்தல் மற்றும் கற்றலில் அதிக தரத்தை அடைய
முயற்சிப்பதால், இதற்கு கூடுதல் முயற்சிகளும் தகுந்த சீரமைப்புகளும்
தேவைப்படுகின்றன:
- குழந்தைகள் விரும்பும் வகையிலான கல்வி கற்பிக்க தேவைப்படும் 1
மில்லியனுக்கு மேற்பட்ட புதிய மற்றும் ஏற்கனவே பணியிலுள்ள ஆசிரியர்களை
அடுத்த 5 ஆண்டுகளில் பயிற்றுவிக்க, புதிய வகை அணுகுமுறைகள் மற்றும்
முயற்சிகள் தேவை.
- இன்றைய தேதியில் பள்ளியில் கற்க வேண்டிய 190 மில்லியன் குழந்தைகளில்
ஒவ்வொருவருக்கும், அவர்கள் விரும்பும் வகையில் ஆரம்பக்கல்வி பெறுவதை உறுதி
செய்ய, அவர்தம் குடும்பத்தினரும் சமுதாயமும், பெரிய அளவிலான பங்களிப்பைத்
தரவேண்டும்.
- சீரிய தரத்தையும், சமத்துவத்தையும் அடைய, தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகள்
நீக்கப்பட வேண்டும். முன்பள்ளிக்கல்வியில் முதலீடு செய்வது குறிக்கோள்களை
அடையக் உதவக்கூடிய சிறந்த அணுகுமுறையாகும்.
- பள்ளிக்குச் செல்லாத 8 மில்லியன் குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைப்பது,
அவர்களை பள்ளியில் இருத்துவது மற்றும் அவர்களை வெற்றியடையச் செய்வது போன்ற
கடுமையான சவால்களை சமாளிக்க, இலகுத்தன்மை உடைய மற்றும் புதுமையான
அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன.
கல்வி உரிமைச் சட்டத்தை மீறினால் என்ன நடவடிக்கை
எடுக்கப்படும்?
இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கத் தேவைப்படும்
ஆய்வுகளைச் செய்வதற்கும், புகார்களை விசாரிப்பதற்கும், குழந்தை உரிமைகளை
பாதுகாப்பதற்கான தேசிய கமிஷனுக்கு (The National Commission for the
Protection of Child Rights), வழக்குகளை விசாரிக்க ஒரு குடிமை
நீதிமன்றத்திற்கு அளிக்கப்படும் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாநிலமும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷனகள்
(State Commission for the Protection of Child Rights - SCPCR) அல்லது
கல்வி உரிமைப் பாதுகாப்பு ஆணையங்களை (Right to Education Protection
Authority - REPA), ஏப்ரல் 1 முதல் ஆறு மாதங்களுக்குள் அமைக்க வேண்டும்.
குறைகள் பற்றி மனு அளிக்க விரும்பும் எவரும், உள்ளூர் அதிகாரிகளிடம்
எழுத்து மூலமான புகார் அளிக்கலாம்.
குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷன்கள் (State Commission
for the Protection of Child Rights - SCPCR) அல்லது கல்வி உரிமை
பாதுகாப்பு ஆணையங்களால் மேல்முறையீடுகள் மீது முடிவுகள் எடுக்கப்படும்.
அவற்றால் வழங்கப்படும் தண்டனைகளை நிறைவேற்ற, மாநில அரசின் நியமனம் பெற்ற
அதிகாரியின் ஒப்புதல் தேவைப்படும்.
கல்வி உரிமைச் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும்? அது
எவ்வாறு நனவாகும்?
சீரிய தரத்தையும் சமத்துவத்தையும் அடைய மற்றும் ஏற்றத்தாழ்வுகளை நீக்க,
பெரிய அளவிலான முயற்சிகள் செய்வது முக்கியமாகும். அரசுகள், சமூக
அமைப்புகள், ஆசிரியர் அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் பிரபல புள்ளிகள் ஆகிய
முக்கிய பங்குதாரர்களை ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு
ஒன்றுபடுத்தும்.தேவையான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், பணிக்கான அழைப்பு
விடுக்கவும், யூனிசெப் இப்பங்குதாரர்களை ஒருங்கிணைக்கும். சட்ட
வடிவமைப்புகள் மற்றும் அவற்றின் செயலாக்கம், குழந்தைகளுக்குத் தேவையான
முடிவுகளை எட்டுவதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் அதிக கவனம்
செலுத்தும். கல்வி உரிமைச் சட்ட நடைமுறைகளை கண்காணிக்கத் தேவையான மாநில
மற்றும் மத்திய அளவிலான அமைப்புகளை வலுப்படுத்தவும் யூனிசெப்
பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றும்.
மூலம்: யூனிசெப்
|
|
-
|
வருடங்கள் கழித்து, மத்திய அமைச்சரவை கல்வி பெறும் உரிமை சட்ட
மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியது. ஒவ்வொரு குழந்தையும் இலவச கட்டாயக் கல்வி
பெறும் உரிமை அவர்களின் அடிப்படை உரிமையாக மாறுவதற்கான சட்ட மசோதா
பாராளுமன்ற ஒப்புதலுக்காக விரைவிலேயே தாக்கல் செய்யப்பட உள்ளது.
சுதந்திரம் பெற்று அறுபது வருடங்களுக்குப் பிறகு, இந்திய அரசு
ஆறிலிருந்து பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி
பெறும் உரிமைக்கான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை நீண்ட காலமாகத் தேங்கிக் கிடக்கும் ஒவ்வொரு குழந்தையும்
கல்வி பெறும் உரிமைக்கான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த
நடவடிக்கை நாட்டின் கல்வித் துறை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
இந்த மசோதாவின் முக்கியமான சாராம்சங்கள்: தனியார் பள்ளிகளில்
அருகில் உள்ள பின்தங்கிய குழந்தைகளுக்கு அந்தந்தப் பள்ளிகளில் 25%
தொடக்கக் கல்விக்கான ஒதுக்கீடு.
அந்தந்தப் பள்ளிகளில் இப்படிப்பட்ட ஒதுக்கீடுகளினால் ஏற்படும்
செலவை அரசு அவர்களுக்குத் திருப்பித் தந்துவிடும்; நன்கொடையோ,
சேர்க்கையின்போது, அதிகப்படியான கட்டணங்களோ கிடையாது; குழந்தைகளுக்கோ
பெற்றோர்களுக்கோ நேர்முகத் தேர்வு நடத்துவதோ, தகுதித் தேர்வு நடவடிக்கைகளோ
இருக்கக் கூடாது.
உடல் ரீதியிலான தண்டனை, ஒரு குழந்தையை நீக்கம் செய்வது அல்லது
வெளியேற்றுவது மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேர்தல் பணி
மற்றும் பேரழிவு மீட்புப் பணிகள் போன்ற பணிகள் தவிர, கல்வி சாராத
பணிகளுக்காக ஆசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்வதை இந்தச் சட்டம்
தடைசெய்கிறது. அங்கீகாரம் பெறாமல் பள்ளி நடத்துவது சட்டப்படியான
நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.
கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமை என்ற சட்டம் ஒரு முக்கியமான
உறுதி மொழியை குழந்தைகளுக்கு வழங்கும் நோக்கத்தில் பார்க்கும்போது,
முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், மத்திய மற்றும் மாநில
அரசுகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்குவது சட்டப்படியான ஒரு
கடமையாக இருக்கும் என்று கூறினார். சில மாநிலங்களில் நடக்கவிருக்கும்
தேர்தலைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக்குப் பிறகு இந்த
மசோதாவின் விவரங்களை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிடும் என்று அவர்
மேலும் கூறினார்.
இந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, இதன்
உள்ளடக்கத்தை நீர்த்துப்போகச் செய்யாமல் இந்த வரைவு நகலுக்கு இந்த மாத
ஆரம்பத்தில் ஒப்புதல் அளித்தது. அருகாமையில் உள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட
குழந்தைகளுக்கு தனியார் ஆரம்பப் பள்ளி சேர்க்கையில் 25 சதவிகித இட
ஒதுக்கீடு அளிக்கப்ட வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய ஷரத்தும் இந்த
உள்ளடமக்கத்தில் இடம் பெற்றுள்ளது! இந்த அரசியலமைப்பு சட்டத்தில்
வரையறுக்கப்பட்டுள்ள தனது கடமையை அரசு தனியார் துறையின் தலையில் கட்டுவதாக
இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என சிலர் கருதுகின்றனர்.
6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும்
கட்டாய கல்வி பெறும் உரிமையை சட்டமாக்குவதற்கான அரசியலமைப்புச்
சட்டத்திருத்தம் 86ஆவது பிரிவு கல்வி உரிமை மசோதா வழிவகுக்கிறது. ஆனால்,
இது உருவாவதற்கு 61 வருடம் ஆயிற்று.
1937ல் இன்று இருப்பதுபோலவே அனைவருக்கும் கல்வி என்ற தேவையைப்
பற்றி மகாத்மா காந்தி குரல் எழுப்பியபோது அதற்கு ஆகக்கூடிய செலவு
என்கிற விஷயம் ஒரு பெரும் தடைக்கல்லாக அமைந்தது. "6 முதல் 14 வயது
வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி
வழங்குவதற்கான முனைப்பு" என்ற வேண்டுகோளாக அரசியலமைப்புச் சட்டம் அதை
அரசாங்கத்திற்கே விட்டுவிட்டது. அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கான
வாய்ப்பு இன்னமும் நழுவிக்கொண்டேதான் இருக்கிறது.
2002ல் தான் அரசியல் அமைப்பு சட்டத்தில் 86ஆவது சட்டத்
திருத்தத்தின்படி கல்வி பெறுவது ஒரு அடிப்படை உரிமையாக மாற்றப்பட்டது.
2004ல் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒரு சட்ட மசோதாவை
தயாரித்தது. ஆனால் அது அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, தேர்தலில்
தோற்றுவிட்டது. இப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி, அரசின் மாதிரி மசோதா
மாநில மற்றும் மத்திய அரசு இவற்றிற்கிடையே நிதி ஒதுக்கீடு மற்றும்
பொறுப்பெடுக்கும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டுள்ளன.
இந்த மசோதாவை விமர்சிப்பவர்கள் வயது வரம்பு பற்றிய கேள்விகளை
எழுப்புகிறார்கள். அவர்கள் ஆறு வயதிற்குட்பட்ட மற்றும் 14 வயதிற்கு
மேற்பட்ட குழந்தைகளும் சேர்க்கப்பட வேண்டும் என்கின்றனர். மேலும்,
ஆசிரியர்கள் பற்றாக்குறை, பல ஆசிரியர்களின் மோசமான தரம், தற்போது
இயங்கிவரும் பள்ளிகளின் உள்கட்டமைப்பில் உள்ள குறைகள், தவிர புதிய பள்ளிக்
கூடங்கள் கட்டப்பட்டு முறையான உள் கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட வேண்டும்
என்ற பிரச்சினைகளைப் பற்றி எல்லாம் அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை.
முதலில் அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புகள் பற்றிய பிரச்சினைகளை
சட்டம் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூலம் இந்த மசோதா சந்திக்க நேர்ந்தது.
சட்ட அமைச்சகம் 25% ஒதுக்கீடு குறித்து பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும்
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஒவ்வொரு வருடமும் 55,000 கோடி ரூபாய்
மொத்த செலவு பிடிக்கும் என்றும் எதிர்பார்த்தன.
ஆலோசனை கமிஷன் நிதி ஏற்பாடு செய்வதில் தனக்குள்ள பிரச்சினைகளை
வெளிப்படுத்தியது. மாநில அரசுகள் இதன் நிதி ஒதுக்கும் விஷயத்தில் அதன் ஒரு
பகுதியைக்கூட ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதனால், மத்திய அரசு தானே இதனை
செயல்படுத்துவதற்கான அனைத்தையும் மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்குத்
தள்ளப்பட்டது.
இந்த வரைவு மசோதா மூன்று வருடத்திற்குள் அனைத்து இடங்களிலும்
ஆரம்பபப்பள்ளிகளை நிறுவ உத்தேசித்திருக்கிறது.
நகர்ப்பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமப் பகுதிகளில் ஏற்படக்கூடிய
தடைகளைக் கருத்தில் கொண்டு இந்த மசோதாவில் குறைந்தபட்ச விதிமுறைகள்
வகுக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி காரணமாக பள்ளிக் கல்வி பெறும்
வாய்ப்பு எந்த ஒரு குழந்தைக்கும் கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதை
மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
"சட்டங்களோ, மசோதாக்களோ குழந்தைகளை பள்ளிக்கு வரவைப்பதில்லை. இதில்
உள்ள முதல் பிரச்சினை ஒவ்வொருவரும் தமது சமூகப் பொறுப்பைப் புரிந்துகொள்ள
வேண்டும், இந்தத் திட்டம் எங்குத் தேவைப்படுகிறதோ அங்குள்ள குழந்தைகளை
சென்றடைய வேண்டும் என்பதுதான் முக்கியம். இதில் குறிப்பிட்டிருப்பதுபோல்
இவர்களுடைய கட்டணங்களை அரசாங்கமே கொடுத்துவிடும் என்பது. ஆனால், இந்த
செலவை அடுத்தவர் தலையில் கட்டுவது சரியில்லை" என்று புதுதில்லியில் உள்ள
மாடர்ன் ஸ்கூல் தலைமை ஆசிரியை லதா வைத்தியநாதன் சொல்கிறார்.
என்றாலும், இந்த மசோதாவை உருவாக்கிய கல்வியாளர்களின் வாதம் இதுதான்
: சமூகப் பொறுப்பில் பங்கேற்பதை ஒரு சுமையாக நினைக்காமல் பெருமையாக
ஏற்கவேண்டும் என்பதே,
ஆதாரம்: இன்ஃபோ சேன்ஜ்
இந்தியா
|
|
-
|
அனைவருக்கும் இலவச, கட்டாய கல்வி உரிமை
சட்டத்தினை அமுல்படுத்தும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நிறுவனமாக தேசிய
குழந்தைகள் நல ஆணையம் செயல்படுகிறது. இந்தச் சட்டத்தினை உரிய முறையில்
நடைமுறைப்படுத்த வேண்டி, பல்வேறு நிறுவனங்கள், அரசுத்துறைகள், சமூகக்
குழுக்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் ஒருமித்த ஆதரவை இந்த ஆணையம்
திரட்டுகிறது. இந்த ஆணையத்தின் கீழ் பல்வேறு அரசுத்துறையின் அதிகாரிகள்,
ஆற்றலும் அனுபவமும் மிக்க கல்வியாளர்கள் பலரைக் கொண்ட நிபுணர் குழுவும்
உருவாக்கப்பட்டு, கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் வழிமுறைகளில் கவனம்
செலுத்தப்படுகிறது.
இந்த நிபுணர் குழு இதுவரை நான்கு முறை
கூடியுள்ளது. தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் கீழ் கல்வி உரிமைக்கான
சட்டத்தை நடைமுறைப்படுத்த மட்டுமே இரண்டு ஆணையர்கள், பிற அலுவலர்களைக்
கொண்ட தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவு மனிதவள மேம்பாட்டு
அமைச்சகத்தின் உதவியோடு செயல்படும்.
மனிதவள மேம்பாட்டு அமைச்சத்தோடு இணைந்து, ஒத்திசையோடு செயல்படும்
வழிமுறைகள் வகுக்கப்படும். கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக
நடைமுறைப்படுத்த செயல்படவேண்டியது மிகவும் அவசியமானது. மூன்றாவது
வழிமுறையாக, தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் கண்களாகவும், காதுகளாகவும்
செயல்படக் கூடிய மாநிலப் பிரதிநிதிகளை நியமிப்பதாகும். இந்தப்
பிரதிநிதிகள் கல்விப் பணியில் அனுபவம் மிக்க நபர்களாக இருப்பர். ஒவ்வொரு
மாநிலத்திலும் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள்
குறித்த தகவலை தேசிய ஆணையத்திற்கு அனுப்புவதோடு, மாநிலங்களில் எழக்கூடய
புகார்கள் குறித்து தொடர் நடவடிக்கைகளையும் இப்பிரதிநிதிகள்
கண்காணிப்பர்.
கல்வி உரிமைச் சட்டத்தோடு நெருங்கிய
தொடர்புடைய பிற அமைச்சகங்களான சமூக நீதி மற்றும் முன்னேற்றம், தொழிலாளர்
நலம், ஆதிவாசிகள் நலம், பஞ்சாயத்துராஜ் போன்ற அமைச்சகங்களோடு தொடர்
கூட்டங்கள் நடத்தப்பட்டு ஒத்த கருத்துக்களோடு செயல்பட
திட்டமிடப்பட்டுள்ளது. உதாரணமாக, தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத்துறை கல்வி உரிமைச் சட்டத்தை
நடைமுறைப்படுத்த கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், ஆதிவாசிகள் நல
அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உண்டு உறைவிடப் பள்ளிகளின் செயல்பாடுகளும்
இச்சட்டத்தோடு நெருங்கிய தொடர்புள்ளது. தேசிய குழந்தைகள் நல ஆணையமும்,
இந்த அமைச்சகங்களும் முறையான தகவல் பரிமாற்றங்களோடு, இணைந்து செயல்பட
வேண்டிய கட்டாயம் உள்ளது.
தேசிய குழந்தைகள் நல ஆணையம் பிற தேசிய ஆணையங்களான பெண்கள்,
பட்டியலிடப்பட்ட இனங்கள், ஆதிவாசிகள் ஆகியவற்றின் உறுப்பினர்களையும்
சந்தித்து கல்வி உரிமைச் சட்டத்தின் முறையான அமுலாக்கம் குறித்து
விவாதித்துள்ளது. குறிப்பாக, பெண்குழந்தைகளின் கல்வி நிலையை மேம்படுத்த
ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஏற்பாடு
செய்யும் பொதுவிசாரணை நிகழ்வுகளில் பிற ஆணையங்களின் உறுப்பினர்களையும்
விசாரணை நீதிபதிகளாக அமர வைக்கும் ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில், பல மாநிலங்களின் பல
பகுதிகளில் கல்வி உரிமைக்காகச் செயல்படும் பல சமூகக் குழுக்களைச் சார்ந்த
20 பேர் கொண்ட கூட்டமும் தேசிய ஆணையத்தால் ஒழுங்கு செய்யப்பட்டது. மாநில
கண்காணிப்புப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான முதற்கட்ட ஆலோசனைக்
கூட்டத்தின் முதல் கூட்டமாகும் இது.
அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தவும்,
கண்காணிக்கவும் பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்பும், பரந்துபட்ட
விழிப்புணர்வும் மிகவும் அவசியம். இந்தச் சட்டத்தினை அனைத்து மாநில
பிரச்சாரங்களையும் தேசிய அளவில் செய்ய வேண்டும். தேசிய ஆணையம் எளிய
முறையிலான பிரச்சார பிரசுரங்கள், சட்டத்தின் முக்கிய ஷரத்துக்கள்
சுவரொட்டிகள், முதன்மைக் கையேடுகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றை
தயாரித்துள்ளது. குழந்தைகளும் இந்தச் சட்டத்தினைப் புரிந்து கொள்ளக்கூடுய
வகையில் மிகவும் எளிமையாக இவை தயாரிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் இவற்றைக்
கொண்டு செல்ல மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், பிற நிறுவனங்களும் கைகோர்க்க
வேண்டும்.
|
|
-
|
நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும்,
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி
(RTE Act, 2009), பள்ளிச் சேர்க்கை நெறிமுறைகள் இருப்பதை உறுதி செய்ய,
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தொடர் நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது. இச்சட்டப்படி தடை செய்யப்பட்ட ஆரம்பக் கல்வி
நிலையில் குழந்தைகளை சேர்ப்பத்ற்கு, சில மாநிலங்களில் நுழைவுத் தேர்வுகள்
நடத்தப்பட்டது தெரியவந்ததால் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன
பள்ளிச் சேர்க்கையை குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்
சட்ட விதிமுறைகளின்படி முறைப்படுத்த உரிய அரசு ஆணைகள் பிறப்பிக்குமாறு,
ஏப்ரல் 2010-ல் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனைத்து
மாநில தலைமை செயலாளர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவுறுத்தியது. மார்ச்
2010-ல் தில்லி தேசிய தலைமைப் பகுதி கல்வி இயக்குநரகம் (GNCTD),
நடத்துகிற ராக்ஷ்டிரிய பிரதிபா விகாஸ் வித்யாலயங்களில் (Rajkiya
Pratibha Vikas Vidyalayas) ஆறாம் வகுப்புச் சேர்க்கைக்காக தேசிய தலைமைப்
பகுதி கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்தே இந்த
எழுத்துப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டது
தில்லி தேசிய தலைமைப்பகுதி கல்வி இயக்குநரகம் அனைத்து நாளிதழ்கள்
மற்றும் அதன் இணையதளத்தில் சேர்க்கைக்காக ரூ. 25/- செலுத்தி விண்ணப்பம்
பெறவும், அதன்பின் நுழைவுத் தேர்வில் பங்கெடுக்கவும் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பின் பின்னரே தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
ஏப்ரல் 2010-ல், உரிய அரசாணையை பிறப்பிக்குமாறு அனைத்து மாநில தலைமை
செயலாளர்களையும் கோரியது. குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விச்
சட்டம் 2009-ன் விதிகளின்படி, பள்ளிச் சேர்க்கைக்கு எத்தகைய நுழைவுத்
தேர்வு முறையும் நடைபெறக் கூடாது என்பதால், இந்த் அறிவிப்பு, இச்சட்ட
விதிமுறைகளுக்கு எதிரானதாக கருதப்பட்டது.
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் முறையைக்
கண்காணிக்கும் அமைப்பாக உள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு
ஆணையம், அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறவும், சட்டத்தின்
விதிமுறைகளுக்கு ஒத்துச் செயல்படவும் தில்லி தேசிய தலைமைப்பகுதி கல்வி
இயக்குனரகத்தின் முதன்மைச் செயலருக்கு எழுத்துபூர்வமாக
அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த அரசாணை தில்லி தலைநகரப் பகுதியில் உள்ள
அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு வார காலத்திற்குள் பிறப்பிக்கப்பட்டு, சட்ட
விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட தேவையான மாற்றங்களை பள்ளிகள் கொண்டு வர ஆவண
செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.
தில்லி கல்வி இயக்குநரகம் இந்த கோரிக்கைகளை செயல்படுத்தாதலால், ஜுன்
2010-ல் ஆணையத்தின் முன் அழைக்கப்பட்டு, ஜுலை 2010-க்குள் இலவசக் கட்டாயக்
கல்விச் சட்டத்தின் அடிப்படையில் பள்ளிச் சேர்க்கைகளை மீண்டும் செய்யுமாறு
கால அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும், தில்லியைப் போன்று பிற
மாநிலங்களிலும் சட்ட விதிமுறைகளை மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய,
அரசாணையில் கீழ்க்கண்ட அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்
என்ற வலியுறுத்தலோடு மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம்
அனுப்பப்பட்டது:.
- இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின் விதிகளின்படி குழந்தைகளின்
சேர்க்கை நடைபெற வேண்டும்.
- வகுத்துரைக்கப்பட்ட பிரிவு மற்றும் அரசு உதவி பெறாத தனியார்
பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போன்றே, நலிவுற்ற பிரிவைச்
சேர்ந்த குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்த
வேண்டும்
மேலும், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் குறித்த அட்டவணை
தயாரிக்கப்பட்டு, அருகாமைப் பகுதி குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கை கோர
முடியும் என்ற சேர்க்கைக்கான சட்டத்தின் விதிகள் குறித்த அரசாணை
அனுப்பப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான மாநில அரசுகளின் சட்ட
விதிகளும் வழிமுறைகளும் மிக விரைவில் வரையறுக்கப்பட வேண்டும் என்றும்
அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவோதயா பள்ளிகள் “வகுத்துரைக்கப்பட்ட பிரிவை” சார்ந்ததாக
இருப்பதால், இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்ற
சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால், இச்சட்டத்தின் பிரிவு 13 விதிவிலக்குகள்
இன்றி அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் தேசிய குழந்தைகள்
உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் பிரிவு 13-ன் இது
தொடர்பான முக்கிய அம்சங்கள்:
எந்தப் பள்ளியோ அல்லது தனிநபரோ, குழந்தையின் பள்ளிச் சேர்க்கையின்
போது, அதன் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரிடமிருந்து தலைக் கட்டணம்
(capitation fee) வசூலிப்பதோ அல்லது முன் தேர்வு முறைக்கு உட்படுத்துதலோ
கூடாது.
- உட்பிரிவு (1) க்கு புறம்பாக, தலைக்கட்டணம் வாங்கும் பள்ளிகள் மற்றும்
தனி நபர்களுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட பத்து மடங்கு வரை அபராதம்
விதிக்கப்படும்.
- குழந்தைகளை பள்ளியில் அனுமதிப்பதற்கான முன் தேர்வு முறைக்கு
உட்படுத்தினால், முதல் தடவையாக மீறும் பொழுது ரூ 25,000/- வரையிலும்,
தொடர்ந்து மீறும் ஒவ்வொரு முறையும் ரூ 50,000/- வரையிலும் அபராதம்
விதிக்கப்படும்.
ூலம்: NCPCR
|
|
-
|
ஆரம்பக் கல்வி பெறும் (வகுப்பு 1 முதல் 8 வரை) குழந்தைகளுக்கு, பள்ளிச்
சேர்க்கையின்போது எந்தவொரு முன் தேர்வு முறைகளும் நட்த்தக்கூடாது என்ற
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளை அனைத்துப்
பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள்
பாதுகாப்பு ஆணையம் (NCPCR), நவோதயா பள்ளிகளின் ஆணையர் மற்றும் அனைத்து
மாநில தலைமை செயலாளர்களுக்கும் எழுத்துப்பூர்வமான கடிதம்
அனுப்பியுள்ளது. தில்லியிலும், பிற மாநிலங்களிலும் நவோதயா
பள்ளிகளில் பள்ளிச் சேர்க்கையின்போது குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வுகள்
நடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் அடுத்து, இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது.
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009, பிரிவு 13-ஐ மேற்கோள்
காட்டி, எந்தப் பள்ளியோ அல்லது தனிநபரோ, குழந்தைகளின் பள்ளிச்
சேர்க்கையின் போது, அதன் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரிடமிருந்து தலைக்
கட்டணம் வசூலிப்பதோ அல்லது முன் தேர்வு முறைக்கு உட்படுத்துதலோ கூடாது
என்றும் உட்பிரிவு (1) க்கு புறம்பாக, தலைக்கட்டணம் வாங்கும் பள்ளிகள்
மற்றும் தனி நபர்களுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட பத்து மடங்கு வரை
அபராதம் விதிக்கப்படும் என்றும் அக்கடிதத்தில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குழந்தைகளை பள்ளியில் அனுமதிப்பதற்கான முன் தேர்வு முறைக்கு
உட்படுத்தினால், முதல் தடவையாக மீறும் பொழுது ரூ 25,000/- வரையிலும்,
தொடர்ந்து மீறும் ஒவ்வொரு முறையும் ரூ 50,000/- வரையிலும் அபராதம்
விதிக்கப்படும்.
“வகுத்துரைக்கப்பட்ட பிரிவு” அட்டவணயில் உள்ள நவோதயா பள்ளிகளுக்கும்
இச்சட்டத்தின் பிரிவு 13 பொருந்தும் எனவும், சேர்க்கைக்கான முன் தேர்வுகள்
நடத்துவது, அப்பிரிவை மீறுவதாகும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும்
இது குறித்து அனத்து பள்ளிகளுக்கும் இச்சட்ட அம்சங்களை விளக்கி உரிய
அரசாணை பிறப்பிக்குமாறும், விதிகளின்படி செயல்பட உரிய செயல்முறை மற்றும்
நடைமுறை மாற்றங்களை ஒரு வார காலத்திற்குள் கொண்டுவரும்படியும்
கோரியுள்ளது.
மூலம்; NCPCR
|
|
கல்வி உரிமை சட்ட மாநில பிரதிநிதிகளின் தொடர்பு
விபரங்கள் 
|
|