கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சத்தான உணவு சமைத்து பரிமாற படுகிறது

the-hindu-chennai-img.jpg

சென்னை

முப்பது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வசதிகளைப் பெருக்குவதற்காக பணவசதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்தவைகள்.

குழந்தை மற்றும் தாய் சேய் நல ஆணையர் கூறியதாவது, கர்ப்பிணி பெண்கள் மருத்துவ உதவிக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதால் நவீன மருத்துவக் கருவிகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவக்கூடம் அத்துடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்குவது மற்றும் தொலைக்காட்சி தொடர்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் 35 லிருந்து இவ்வருடம் 65 ஆக உயர்நதுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புதூர் கிராம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏறத்தாழ தினமும் ஒரு குழந்தை பிறக்கின்றது.

பண்டிகாவனூர் கிராமத்தில் உள்ள ஒரு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில், அக்கிராம மக்கள் தொகை 2000 பேரில் சுமார் 110 பேர் வாராந்திர விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குத் வருகைத் தருகின்றனர். எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் குறித்த விளக்கம் மற்றும் பரிசோதனை செய்யப்படுகிறது.

 
தகவல் - ஹிந்து செய்தித்தாள், டிச 5, 2007.



Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: