மயக்கம் ஏற்படுதல்

மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.

  • தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு
  • சோர்வு
  • வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு
  • தோல் வெளுத்துக் காணப்படுதல்.

மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது

  • முன்புறமாக சாய வேண்டும்
  • தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக்  கொள்ள் வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது

  • பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை  உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
  • இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.
  • குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால்,   பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: