|
குழந்தைப் பிறப்பை திட்டமிடுதல் குறித்துள்ள தகவல்களை பகிர்ந்து
கொள்வது மற்றும் அதன்படி செயல்படுவதிற்கான அவசியம் என்ன?
குழந்தைப் பிறப்பு, அதிகமான எண்ணிக்கையிலோ, இடைவெளி இல்லாமலோ, மிக இளம்
வயதிலோ அல்லது 35 வயதுக்குப் பின்போ ஏற்பட்டால், அது பெண்களின் உடல் நலனை
பெரிதும் பாதிக்கிறது. மேலும் அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளில்
மூன்றில் ஒரு பங்கு இறந்து விடுவதாகவும் கணக்கெடுப்பு
தெரிவிக்கின்றது.
குடும்பக்கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை
முன்னேற்றச் செய்யும் சிறந்த வலிமைமிக்க வழிகளில் ஒன்றாகும். வளரும்
நாடுகளில் உள்ள 10 கோடிக்கும் அதிகமான திருமணமான பெண்கள், தங்களின்
கருத்தடைக்கான தேவைகள் சந்திக்கப்படாமல் உள்ளதாகக் கூறுகின்றனர்.
குடும்பக்கட்டுபாட்டுச் சேவையை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், கல்வியை
உலகமயமாக்குதல் போன்றவை பிரசவ கால தாய்சேய் இறத்தல் மற்றும் ஊனமான
குழந்தைகள் பிறப்பதை தடுக்க உதவும்.
-
|
ஒவ்வொரு குடும்பமும், சமூகமும், குழந்தைப் பிறப்புக்காலத்தைக்குறித்து
அறிந்து கொள்ள வேண்டியவைகள் பின் வருமாறு
- 18 வயதிற்கு முன்போ அல்லது 35 வயதுக்கு பின்போ கருத்தருப்பரிது தாய்,
சேயின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதை அதிகரிக்கிறது.
- தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு, ஒவ்வொரு குழந்தைப்
பிறப்புகளுக்குமிடையே குறைந்த பட்சம் இரண்டு வருட இடைவெளி இருப்பது மிக
அவசியம்.
- நான்கு கருத்தரிப்பிற்குமேல் கருத்தரிப்போ, பிரசவமோ ஏற்படும் போது
பெண்ணின் உடல்நிலை அதிக பாதிப்புக்குள்ளாகிறது.
- எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்வது, எத்தனை குழந்தைகள், எவ்வளவு வருட
இடைவெளியில் பெற்றுக்கொள்வது, எப்பொழுது குழந்தை பெறுவதை நிறுத்துவது
போன்ற திட்டமிடுதலைக் குறித்த தகவல்களை சுகாதார மையம் மக்களுக்கு
அளிக்கிறது. கருவுறுவதை தவிர்க்கின்ற பாதுகாப்பான, ஏற்றுக்கொள்ளக்கூடிய
வழிமுறைகளும் பல உள்ளன.
- குடும்பக்கட்டுபாடு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் உரிய
பொறுப்பாகும். ஒவ்வொருவரும் ஆரோக்கியத்தின் மேன்மையைக் குறித்து அறிந்து
கொள்வது அவசியமாகும்.
|
|
குழந்தை பிறப்பை திட்டமிடுதல் குறித்த உபதகவல்கள் : 1
2
3
4
5
|