சுகாதாரம்
| |
சுகாதாரம் பற்றின தகவல்களை பகிர்ந்து நடைமுறைப் படுத்துவதின் முக்கியத்துவம் என்ன? குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகளில் வரும் உடல்நலக்கேடுகள் மற்றும் இறப்புகளில் பாதிக்கு மேல், உணவு, தண்ணீர் மற்றும் அழுக்கான கைகள் மூலம் வாயிற்குள் செல்லும் நோய்கிருமிகளால் ஏற்படுகிறது. பெரும்பாலான இந்நோய் கிருமிகள், மனித மலம் மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து வருகிறது. பேதி போன்ற பெரும்பாலான உடல்நலக்குறைவுகள், நல்ல சுகாதாரப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது மூலம் தடுத்து நிறுத்தலாம். கழிவறையில், மலம் கழித்தல் அல்லது கொட்டுதல், மலம் கழித்த அல்லது குழந்தைகள் கழித்த மலத்தை அப்புறப்படுத்தின பின்னரோ மற்றும் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முன்னர் அல்லது உணவுகளைத் தொடும் முன் கைகளை சோப்/சாம்பல் மற்றும் தண்ணீர் கொண்டு நன்கு கழுவ வேண்டும். விலங்குகளின் கழிவுகள் வீடு, பாதை மற்றும் சிறுபிள்ளைகள் விளையாடும் பகுதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தல் அவசியம் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து கழிவறைகள் கட்டி பயன்படுத்த வேண்டும். நீராதாரங்களை பாதுகாக்க வேண்டும். கழிவுப்பொருள் மற்றும் கழிவுநீரை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். குறைந்த செலவில் மேற்கொள்ளக்கூடிய கழிவறைகளை கட்ட, அரசாங்கம் உதவ வேண்டும். நகர்புறங்களில், குறைந்த விலையில் துப்புறவு மற்றும் வடிகால் வசதிகள், மேம்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகம் மற்றும் குப்பைகள் அகற்றும் பணிகளுக்கு அரசாங்கம் உதவவேண்டும்
|
||
| << முந்தைய தலைப்பு அடுத்த தலைப்பு>> |


