வயிற்றுபோக்கு / பேதி

 
குழந்தை பிறப்பை திட்டமிடுதல்
பாதுகாப்பான தாய்மை
குழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை
தாய்ப்பால் அளித்தல்
ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி
தடுப்பூசி
வயிற்றுப்போக்கு
இருமல், சளி மற்றும் இதர ஆபத்தான சுகவீனங்கள்
சுகாதாரம்
மலேரியா
எச்.ஐ.வி / எயிட்ஸ்
காயத்தடுப்பு முறை
பேரழிவு மற்றும் அவசரகால நிலை
குறிப்புகளின் சுருக்கம்

பேதி பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதும் அதன் படி நடவடிக்கை எடுப்பதும் ஏன் அவசியம்?

பேதி, நீர்பற்றாக்குறையாலும் மற்றும் ஊட்டச்சத்து குறைபட்டாலும், ஒரு ஆண்டில் சுமார் 1 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கின்றன. பேதியால் பெரியவர்களை விட குழந்தைகள்தான் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம், ஏனெனில் குழந்தைகளுக்கு சீக்கிரமாகவே நீர் பற்றாகுறை ஏற்பட்டுவிடும். பேதியால் அவதிப்படும் 200 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழக்கிறது.

பேதி வாயின்மூலம் உள்ளே செல்லும்கிருமியால், குறிப்பாக மனித கழிவுகளிலிருந்து உருவாகும் கிருமிகளால் ஏற்படுகிறது. பாதுகாப்பில்லாமல் வெளியேற்றப்படும் மனித கழிவுக, அசுத்தமான பழக்கவழக்கங்கள் அல்லது சுத்தமான நீரின் பற்றாகுறை போன்றவற்றால் பேதி ஏற்படுகிறது. தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் சிசுக்களுக்கு பேதி வருவது மிகவும் குறைவு.

குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் சேர்ந்தும், அரசு அல்லது அரசு அல்லாத நிறுவனங்களின் உதவியுடன் செயல்பட்டால், பேதி உருவாகும் சூழ்நிலைகளை தவிர்க்க அதிகமாக செயல் பட முடியும்...

முக்கிய குறிப்புகள்:

பேதி பற்றி ஒவ்வொரு குடும்பம், சமூகமும் உரிமையுடன் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

  1. பேதி நீரை வெளியேற்றி, உடலில் நீர்பற்றாகுறை ஏற்படுத்துவதன்மூலம் குழந்தைகளை உயிரிழக்க செய்கிறது. பேதி தொடங்கியவுடன், குழந்தைக்கு தினமும் தரும் உணவு மற்றும் நீருடன், அதிக திரவங்கள் தரப்படவேண்டியது மிகவும் அவசியம்.
  2. ஒரு மணி நேரத்திற்குள், பல தடவை மலத்தை நீராக கழித்தாலோ, அல்லது மலத்துடன் இரத்தம் காணப்பட்டாலோ, குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும். பயிற்சி பெற்ற சுகாதார ஊழியரிடமிருந்து உதவி பெறவேண்டும்.
  3. தாய்ப்பாலூட்டுவதால் பேதியின் தீவிரமும், எண்ணிக்கையும் குறையும்
  4. பேதியால் அவதிப்படும் குழந்தை தொடர்ந்து முறையாக சாப்பிட வேண்டும். பேதி சரியான பிறகு, குழந்தைக்கு ஒரு நாளில் ஒரு முறையாவது அதிகமான உணவை இரண்டு வாரத்திற்கு சாப்பிட வேண்டும்.
  5. தொடர்ச்சியான அல்லது தீவிர பேதியால் அவதிப்படும் குழந்தைக்கு நீர்குறைபாடு ஏற்பட்டால், பயிற்சி பெற்ற சுகாதார ஊழியரால் பரிந்துரைக்கப்பட்ட வாய்வழி ரீ-ஹைட்ரேஷன் திரவங்கள் அல்லது மருந்துகள் மட்டுமே தரவேண்டும். மற்ற பேதி மருந்துகள் பொதுவாக வேலை செய்வதில்லை அல்லது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.
  6. பேதியை தவிர்க்க, மனித கழிவுகளை கழிவரையில் நீக்கம் செய்ய வேண்டும் அல்லது புதைக்க வேண்டும்.
  7. நல்ல சுகாதார பழக்கவழக்கமுறைகள், பேதியிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது. கைகள் மனித கழிவுகளுடன் தொடர்பு கொண்டால், குறிப்பாக உணவைத் தொடும் முன்பும் அல்லது குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முன்பும், சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சாம்பல் மற்றும் தண்ணீர் உபயோகித்து நன்றாக கழுவ வேண்டும்.


பாதுகாப்பான தாய்மை குறித்த உபதகவல்கள் :1   2   3   4   5   6   7

  << முந்தைய தலைப்பு   அடுத்த தலைப்பு>>

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: