ரயில்வே பட்ஜெட் - 2009 : முக்கிய அம்சங்கள்
புதுதில்லி, ஜூலை
3: 2009-10 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே
அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
முக்கிய அம்சங்கள்
:
- சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 50 ரயில்நிலையங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்.
- தில்லி, சென்னை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் 'மகளிர் மட்டும்' ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இத்தகைய ரயில்கள் பணிபுரியும் பெண்களுக்கு வசதியாக அலுவலக நேரங்களில் மட்டும் இயங்கும். ஏற்கெனவே இதுபோன்ற ரயில் மும்பையில் இயங்கி வருகிறது.
- ரயில் நிலையங்களில் பல்நோக்கு வணிக வளாகங்கள் கட்டப்படும்
- நீண்டதூர ரயில்களில் பயணிகளுக்கு அவசரச் சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்கள் நியமனம்.
- கூடுதலாக 200 டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்படும்.
- கூடுதலாக 3000 சாதாரண டிக்கெட் பெறும் கவுன்டர்கள் திறக்கப்படும்.
- 5000 அஞ்சலகங்களில் ரயில் டிக்கெட் பெறும் வசதி.
- பெருநகரங்களுக்கு இடையேயான ரயில்களில் இரண்டடுக்கு கோச்கள் அறிமுகம்
- சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் நர்சிங் கல்லூரிகள் திறக்கப்படும்.
- 18 ஆயிரம் புதிய சரக்கு ரயில் பெட்டிகளை வாங்கத் திட்டம்.
- மாத வருமானம் ரூ.1500க்கும் குறைவாக உள்ள குடும்ங்களைதச் சேர்ந்தவர்களுக்கு 100 கி.மீ.வரை பயணம் செய்ய ரூ.25 க்கு மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்படும்.
- பத்திரிகையாளர்களுக்கான கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும்.
- சென்னை-தில்லி, சென்னை-அலகாபாத், புவனேசுவர் - தில்லி, எர்ணாகுளம்-தில்லி உள்ளிட்ட 12 பாயிண்ட் டூ பாயிண்ட் (இடையில் நிற்காத) ரயில் சேவைகள் தொடங்கப்படும்.
- தத்கல் முன்பதிவு செய்யும் நாள்கள் 5-லிருந்து 2-ஆகக் குறைப்பு. தத்கல் கட்டணமும் குறைப்பு.
- பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.








