தெளிப்பு நீர் பாசனம்
தெளிப்புநீர் பாசனம் என்பது, நீரை மழைபோல பயிர்களுக்கு வழங்கும் பாசனமாகும். மோட்டார் மூலம் நீரை பைப்புகள் மற்றும் தெளிப்பான் மூலம் தெளிக்கச் செய்து, வயல் முழுவதும் பாசனம் செய்யப்படும். தெளிப்பான் மூலம் தெளிக்கச் செய்வதனால், நீர் சிறு சிறு துளிகளாக மாறி நிலத்தில் விழும்.
இப்பாசனத்தின் மூலம், சிறிய மற்றும் பெரிய நிலங்களை மிகச்சுலபமாக பாசனம் செய்யலாம். பல்வேறு வெளியேற்று திறன் கொண்ட தெளிப்பான்கள் கிடைப்பதால், எல்லாவிதமான நிலங்களுக்கும் ஏற்ற பாசன திட்டமாகும்.
இப்பாசன முறையானது, கோதுமை, கொண்டகடலை, பயிறு, காய்கறிகள், பருத்தி, சோயா, தேயிலை, காப்பி, தீவனப்பயிர்கள் ஆகிய அனைத்து பயிர்களுக்கும் ஏற்றது ஆகும்.
தகவல்: ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ் லிமிடேட், ஜல்கான்வ்


